பூசை நேரங்கள்: |
ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் திருவரங்க பஞ்சாங்கம் பின்பற்றபட்டு வருகின்றது. பூசைகள் பாஞ்சராத்ர ஆகமங்கள் படி நடந்து வருகின்றன.தென் கலை சம்பரதாயம் பின்பற்றபட்டு வருகின்றது.
ஒரு கால பூசை மட்டுமே நடைபெற்று வருகின்றது. காலைவ வேளைகளில் பூசை மஹா நெய்வேத்யங்களுடன் நடைபெறும். |
திருமஞ்சன காலங்கள் கோஷ்டி சேவை காலங்கள்
|
மாதந்தோறும் உரோகிணி,திருவோண திருநட்சத்திரங்கள் முறையே திருமஞ்சனங்கள் மூலவர் , ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு நடைபெறும்.
இது தவிர நடைபெறும் சிறப்பு திருமஞ்சனங்கள்
கோஷ்டி சேவை காலங்கள்: வாரந்தோறும் சனிக்கிழமைகள் மாலை வேளையில் 7.00மணியளவில் திருப்பாவை கோஷ்டி சேவை நடைபெறும். இதில் திருப்பல்லாண்டு,வாரனம் ஆயிரம்,ஆழ்வார்களுக்கு ஒருபாசுரம் வீதம் 12 பாசுரங்கள் சேவிக்கப்படும். ஆழ்வார்களிலின் வருடாந்திர திருநட்சத்திரங்களில் அவர்கள் அருளிச்செயலில் அனைத்தும் சேவிக்கப்படும். கட்டளை அர்ச்சனை: மாதந்தோறும் நடைபெறும் திருமஞ்சன காலங்களிலும், வியாழ்க்கிழமைகளில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கும்,சனிக்கிழமை ஸ்ரீ கண்ணபிரானுக்கும்,பஞ்சமி திதிகளில் ஸ்ரீ கருடாழ்வாருக்கும் ஏகாதசிகளிலும் கட்டளை திருமஞ்சனம் நடைபெறும். பிராத்தனைகள் : மூலவர்:
ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் ஞான தேவதைகளுக்கு எல்லாம் ஞான தேவனை பற்றி அறியாதர் இலர். இயவரை ஸ்ரீ லக்ஷ்மி சமேதராக இங்கு சேவிப்பீர்கள்.ஆகவே கல்வி(யும்)ச்செல்வத்தினை எளிதே இங்கு பெற இயலும். சிறப்புகள்:
வழிபாடுகள்:
ஸ்ரீ கருடாழ்வார்: ஷ்யப மகரிஷிக்கும், வினதைக்கும் பிறந்த குழந்தை கருடன். விஷ்ணுவின் வாகனமான இவருக்கு `பெரியதிருவடி' என்ற சிறப்புப் பெயர் உ ண்டு. கருடனின் தாய் வினதையைக் கத்ரு என்பவள் அடிமையாக்கினாள். அவளை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்க, தேவலோகத்திலுள்ள அமுத கலசத்தைக் கொண்டு வர நிபந்தனை விதித்தாள். நெருப்புக்குண்டத்தின் நடுவில் அந்தக் கலசம் இருந்தது. அதை தைரியமாக எடுத்து கொண்டு வந்து கொடுத்து அன்னையை விடுவித்தார், கருடன். இவர் பெருமாளின் பக்தர் என்பதால் `கருடாழ்வார்' என்று அழைக்கப்படுகிறார். கருட,நாக பஞ்சமி நாக சதுர்த்திக்கு அடுத்த நாள் வருவது கருட பஞ்சமி விரதம். மகளிர் விரதமிருந்து கருடனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மகப்பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக தோஷங்கள் விலகிவிடும். ஆர்வம் நிறைந்த ஆழ்ந்த பக்தியுடன் கருடனை வழிபட்டால், வழிபாட்டின் முடிவில் கருட தரிசனம் கிடைப்பது உறுதியாகும். கருட தரிசனம் கிடைத்தால் விரதத்தை உடனே முடித்துக்கொண்டு உணவருந்தலாம். . |